Monday, May 10, 2010

தந்தானைத் துதிப்போமே கீர்த்தனை 237

பல்லவி

தந்தானைத் துதிப்போமே;- திருச்
சபையாரே, கவி- பாடிப்பாடி .

அனுபல்லவி
ஒய்யாரத்துச் சீயோனே, -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதி
செய்குவையே ,மகிழ் கொள்ளுவையே , நாமும் -தந்

கண்ணாரக் களித்தாயே ,-நனமிக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து ;
எண்ணுககடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமென்மேற் சோனா மாரிபோற பெய்துமே .- தந

சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தை சிந்தி எடுத்தே உயிர் வரம் -தந

தூரம் திரிந்த சீயோனே ,-உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை- தந

No comments:

Post a Comment