Saturday, May 22, 2010

வரவேணும் பரனாவியே கீர்த்தனை 101

பல்லவி
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

No comments:

Post a Comment