Saturday, May 30, 2009

எங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188

பல்லவி

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .

சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே

வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே

எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே

உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே - எங்கே

தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே

ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்

Thursday, May 28, 2009

உன்றன் சுய மதியே கீர்த்தனை 121

பல்லவி
உன்றன் சுயமதியே நெறி என் று
உகந்து சாயாதே ;-அதில் நீ
மகிழிந்து மாயாதே .

சரணங்கள்
மைந்தனே ,தேவ மறைப்படி,யானும்
வழுத்தும் மதி தனைக் கேளாய் ;-தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய் .-உன்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ ,
வந்து விளையுமே கேடு ;-அதின்
தந்திர போக்கை விட்டோடு ;கதி தேடு ;-உன்


துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே ;-தீயர்
கெட்ட வழியில் நில்லாதே ;-அது தீதே ;-உன்

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே ;-அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே,-உன்


நான் என்ற எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் ; -அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் ;மனஸ்தாபம்; -உன்

Wednesday, May 27, 2009

ராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272

பல்லவி

ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்

ராஜ்யம் புவிஎணககும் மகா மாட்சியாய் விளங்க

அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயாவே!

அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

சரணங்கள்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,

மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் !

நாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,

மேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் !

நல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்

புன்னகையொடு நிற்பானேன் ? பூமுடி சூட்டுங்கள் !

இந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,

சிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் !


யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,

ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்


சகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்

மகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்

மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267

பல்லவி

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69

பல்லவி

என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் !

இயம்பலாகாதே ,

மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே .

சரணங்கள்

கூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம் ;

நாடியே நம்மை தேடியே வந்த

நாதனைப் போற்றிடுவோம் .

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்

பரிகரித்தாரே;

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே .

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

அருளினதாலே ;

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகர வேண்டியதே .

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்

ஜெயக் கொடியுடனே,

மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற

மன்னனைத் தோத்தரிபோம்.

Thursday, May 21, 2009

இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142

இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர

அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர

தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர