Showing posts with label வின்பிரட். Show all posts
Showing posts with label வின்பிரட். Show all posts

Tuesday, April 21, 2009

தீய மனதை மாற்ற வாரும் கீர்த்தனை 102

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும் , தூய ஆவியே , - கன
நேய ஆவியே .

சரணங்கள்

மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
பாவி நான் .- தீய

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,- மருள்
தீர்க்கும், தஞ்சமே .- தீய

பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடி தான் ஐயா - ஒரு
பாவி நான் ஐயா ,-தீய

ஏக்கதோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே ,-தினம்
இதயம் அஞ்சவே .-

புதிய சிந்தை, புதிய ஆசை புதுபித்தாக்கவே,- அதைப்
புகழ்ந்து காக்கவே,- தீய

கிற்ஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
கிருபை தேடவே.- தீய

தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே.- தீய

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்து போற்றவே, மிக சிறப்பாய்
ஏற்றவே,- தீய