Showing posts with label யோ.யாக்கோபு. Show all posts
Showing posts with label யோ.யாக்கோபு. Show all posts

Saturday, April 24, 2010

ஆ! அம்பர உம்பர மும் கீர்த்தனை 33

பல்லவி

ஆ! அம்பர உம்பர மும் புகழ்ந்திரு

அதிபன் பிறந்தார் .

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் ,-அமலாதிபன் பிறந்தார்.- ஆ!

சரணங்கள்

அன்பான பரனே !-அருள் மேவுங் காரணனே -நவ

அச்சய சச்சித - ரட்சகனாகிய

உச்சித வரனே !- ஆ!

ஆதம் பவமற,-நீதம் நிறைவேற -அன்று

அல்லிராவினில் -தொல்லையிடையினில்

புல்லணையிற் பிறந்தார் .- ஆ!

ஞானியர் தேட, வானவர் பாட,-மிக

நன்னய ,உன்னத-பன்னரும் ஏசையா

இந்நிலம் பிறந்தார் .-ஆ!

கோனவர் நாட,- நானவர் கொண்டாட ,-என்று

கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே , யூத

கோத்திரன் பிறந்தார் .-ஆ!

விண்ணுடு தோண,- மன்னவர் பேண ,- ஏரோது

மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட

விந்தையாய்ப் பிறந்தார் .- ஆ!