பல்லவி
ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது
ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம் .
அனுபல்லவி
சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்
தஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செயவோமாகில்
அற்புதமான பலனை அடையலாம் .-
சரணங்கள்
பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் ,- ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்திவிட்டால் ,
ஆளுந்துரையவ னாயிருந்தாலூமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும
கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவ சுதன் -வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தை தானே ;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே
Showing posts with label யே.ஞானமணி. Show all posts
Showing posts with label யே.ஞானமணி. Show all posts
Monday, July 20, 2009
Friday, April 3, 2009
எல்லாம் இயேசுவே
எல்லாம் இயேசுவே,- எனக்கெல்லாம்
தொல்லைமிகு மிவ்வுலகில் -துணை யேசுவே
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்;
தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் ,-
கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்,
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்
போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்-
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .-
தொல்லைமிகு மிவ்வுலகில் -துணை யேசுவே
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்;
தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் ,-
கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்,
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்
போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்-
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .-
Subscribe to:
Posts (Atom)