Showing posts with label சுந்தரம். Show all posts
Showing posts with label சுந்தரம். Show all posts

Monday, July 25, 2016

பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265

பல்லவி 
பயந்து கர்த்தரின் பாதை யதனில் 
பணிந்து நடப்போன்  பாக்கியவான் 
அனு பல்லவி  
முயன்று உழைத்தே  பலனை உண்பான் 
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் 
சரணங்கள் 
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
 தண்ணிழல் திராட்சைக்  கொடி போல் வளரும் 
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் 
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் 

ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே 
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே 
மெலிவிலா நல்ல பாலருன்  பாலே 
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே 

கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக் 
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை 
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் 
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை