பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்
எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்
வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்
அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்
Showing posts with label எழுதியவர் தெரியவில்லை. Show all posts
Showing posts with label எழுதியவர் தெரியவில்லை. Show all posts
Friday, October 30, 2009
Thursday, June 25, 2009
விசுவாசியின் காதில் பட கீர்த்தனை 108
பல்லவி
விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் .
சரணங்கள்
பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவதுவே ;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த பெயரே .- விசு
துயரையது நீக்கிக் காயமாற்றி குணப்படுத்தும் ;
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும் -விசு
காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும் ,
மாயை கொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் .-விசு
எல்லை இல்லாக் கிருபைத் திரள் ஏற்று நிறைந்திருக்கும் ,
எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே .- விசு
என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே ,முடிவே ,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும், தேவே .-விசு
Monday, April 27, 2009
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,கீர்த்தனை 286
பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,
விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர் ,பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!-
சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம் சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய் ;
பொல்லாப் பேயின் மோசம் நின்றென்னைக் காத்தாய்-வினை
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தனவானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதிதானேசென்றன ;
அடியேனும் பள்ளி கொள்வேனே ;-வினை
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம் ;
ஜெகக் தின்பங்கள் விழைந்து சேர்த்தல் நிர்ப்பந்தம் ;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம் ;
பட்சம் வைத்தாள்வையேல் ,அதுவே ஆனந்தம்; -வினை
இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல்,உன் முத்தி தாராய்; -வினை
.
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,
விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர் ,பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!-
சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம் சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய் ;
பொல்லாப் பேயின் மோசம் நின்றென்னைக் காத்தாய்-வினை
சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தனவானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதிதானேசென்றன ;
அடியேனும் பள்ளி கொள்வேனே ;-வினை
ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம் ;
ஜெகக் தின்பங்கள் விழைந்து சேர்த்தல் நிர்ப்பந்தம் ;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம் ;
பட்சம் வைத்தாள்வையேல் ,அதுவே ஆனந்தம்; -வினை
இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல்,உன் முத்தி தாராய்; -வினை
.
Subscribe to:
Posts (Atom)