Showing posts with label சா. பரமானந்தம். Show all posts
Showing posts with label சா. பரமானந்தம். Show all posts

Friday, November 6, 2009

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் கீர்த்தனை 268

பல்லவி

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .

அனுபல்லவி

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்

சரணங்கள்

பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் - பாலர்

தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.--பாலர்

இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்

Tuesday, May 5, 2009

ஏசுவைப் போல நட கீர்த்தனை 220

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -



சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-



சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --


எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்

Thursday, April 23, 2009

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் கீர்த்தனை 260



பல்லவி

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? -அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.

அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-

சரணங்கள்

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்

எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

வருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய

வியாழ னிரவில் வியாகுலத்தோடே

விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே

முடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி

மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே-அதிசய

Saturday, April 4, 2009

எழுந்தார் இறைவன்

பல்லவி
எழுந்தார் இறைவன் ,-ஜெயமே
எழுந்தார் இறைவன்

சரணங்கள்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க ,- இப்
பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க -உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க .-

விழுந்தவரை கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற -
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற

கருதிய காரியம் வாய்க்க்த் -தேவ
சுருதி மொழிகளெ ல்லாம் காக்க -நம்
இரு திறத்தாரையும் சேர்க்க -