Showing posts with label ஆபிரகாம் பண்டிதர். Show all posts
Showing posts with label ஆபிரகாம் பண்டிதர். Show all posts

Friday, October 30, 2009

கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35

பல்லவி

கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று

அனுபல்லவி

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்

சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்

தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்

முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்

மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்

அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்

அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்