பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .
சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்
2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்
3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்
4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்
5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்
Showing posts with label சவரிமுத்து உபாத்தியார். Show all posts
Showing posts with label சவரிமுத்து உபாத்தியார். Show all posts
Wednesday, June 8, 2011
Monday, April 20, 2009
யேசு நசரையீ னதிபதியே கீர்த்தனை 84
யேசு நசரையீ னதிபதியே ,-பவ நரர் பிணை யென வரும் .
அனுபல்லவி
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ
சரணங்கள்
இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-
நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்
கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்
அனுபல்லவி
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ
சரணங்கள்
இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-
நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்
கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்
Subscribe to:
Posts (Atom)