Showing posts with label சவரிமுத்து உபாத்தியார். Show all posts
Showing posts with label சவரிமுத்து உபாத்தியார். Show all posts

Wednesday, June 8, 2011

உந்தன் ஆவியே , சுவாமி , என்றான் மீதினில் கீர்த்தனை 95

பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்

Monday, April 20, 2009

யேசு நசரையீ னதிபதியே கீர்த்தனை 84

யேசு நசரையீ னதிபதியே ,-பவ நரர் பிணை யென வரும் .

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ

சரணங்கள்

இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-



நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்