Showing posts with label ஞா.சாமுவேல். Show all posts
Showing posts with label ஞா.சாமுவேல். Show all posts

Thursday, September 13, 2012

ஐயனே ! உமது திருவடி களுக்கே

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
 ஆயிரந்தரந் தோத்திரம் !
 மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
 விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்ந்தர வணைத்தீரே:
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா  தரிப்பீரே .

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
   ஏழையைக் குணமாக்கும்
   கருணையாய்  என்னை உமதகமாக்கிக்
   கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
   நாளெல்லாம்  நீர் காரும்.
  தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
  தெய்வமே , அருள் கூரும் .

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
  சுத்தனே துணை நில்லும்
  துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
  தூய் வழியே செல்லும்.

6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
   உதவி நீர் செய்வீரே .
   ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
  இன்பமாய்ப் பெய்வீரே.

7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க 
    அயலான் நலம் பார்க்கச் 
    சித்தமாய் அருளும், மெய் விசுவாசம் 
    தேவனே உமக் கேற்க.
 
8. இன்றும்  என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ 
    டேயடியேன்  நடத்தப் 
    பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப் 
    பூவுலகில் கடத்த 
 
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர 
    ஏகா தயைகூரும் 
    தந்தையே , நானதற்  குதவியாயிருக்கத் 
   தற்பரா வரந் தாரும் 
 
 
 
 
 
 


   

Monday, April 26, 2010

ஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277

ஐயனே!உமது திருவடிகளுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே !உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம் ?

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே ;
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

இருதயந் தனை நீ புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

நாவிழி செவியை , நாதனே , இந்த
நாளெல்லாம் நீர் காரும் .
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே, அருள்கூரும் .

கைகாலால் நான் பவம் புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே ,உம்மால் தான் எனதிதயம்
தூய்வழி செல்லும் .

ஊழியந் தனை நான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.

அத்தனே! உமது மகிமையை நோக்க ,
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் ,மெய்விசுவாசம் ,
தேவனே உமக்கேற்க.

இன்றும் என்மீட்ப்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும்.என் நாளைப்
பூவுலகில் கடத்த .

இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்.
தந்தையே ,நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும் .