Showing posts with label தைரியம் எழுத்தர். Show all posts
Showing posts with label தைரியம் எழுத்தர். Show all posts

Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .