Showing posts with label ம. வேதமாணிக்கம். Show all posts
Showing posts with label ம. வேதமாணிக்கம். Show all posts

Tuesday, April 20, 2010

ஆ! இன்ப கால மல்லோ கீர்த்தனை 209

பல்லவி

ஆ! இன்ப கால மல்லோ?-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ ?

அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னை கொண்டேகிடும் - ஆ!

சரணங்கள்

துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன் - சோதனைகள் போக்கி ,
அம்பர வாசிகளோ - டிதயத்தை -இன்ப உறவாக்கி
கெம்பீரமாகாவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும் .- ஆ!

ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதினில் உற்று
தேவ நகர் கானுற்றுச் சடத்தை -ஜெகத்தில் எரிந்துவிட்டு,
ஆவிகளிப்புடன் ஆகாயஞ் செல்லவே ,
அன்பொடுபார்த்து நல வந்தனஞ் சொல்லுவேன்- ஆ!