வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .
அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .
சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .
ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.
விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .
பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்
Showing posts with label சா.சீமோன். Show all posts
Showing posts with label சா.சீமோன். Show all posts
Monday, August 31, 2009
Tuesday, July 7, 2009
ஜெப சிந்தை என்னில் தாரும் கீர்த்தனை 206
பல்லவி
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை
அனுபல்லவி
அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -
சரணங்கள்
உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப
இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப
ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை
அனுபல்லவி
அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -
சரணங்கள்
உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப
இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப
ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப
Wednesday, April 22, 2009
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் கீர்த்தனை 189
பல்லவி
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ,யேசுவே.
அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-
நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ,யேசுவே.
அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-
ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-
நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-
Subscribe to:
Posts (Atom)