பல்லவி
ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .
சரணங்கள்
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா
எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா
மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
Showing posts with label ஆ.தேவக்கண். Show all posts
Showing posts with label ஆ.தேவக்கண். Show all posts
Saturday, June 27, 2009
Thursday, May 21, 2009
இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142
இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர
தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர
தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர
Subscribe to:
Posts (Atom)