Showing posts with label தேவசகாயம் உபாத்தியார். Show all posts
Showing posts with label தேவசகாயம் உபாத்தியார். Show all posts

Monday, July 27, 2009

வா பாவி மலைத்து நில்லாதே கீர்த்தனை 124

பாலவி
வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

சரணங்கள்
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன் - வா

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .- வா

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ? - வா

Thursday, June 18, 2009

அடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168

பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன்
அடைக்கலம் அடைக்கலமே !

அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை

சரணங்கள்
ஆசையோடு பாவமத்தில் அலைந்து திரிந்தேனே ,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே ;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்ந்தருள் !-அடை

கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன் ;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே ,
கிட்டி வந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!- அடை

சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும் ;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!-அடை

என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தாயல்லவோ

Sunday, April 19, 2009

நீயுனக்குச சொந்தமல்லவே ; கீர்த்தனை 131

பல்லவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே; மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே.

அனுபல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே ;
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் .

சரணங்கள்
சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே, திருரத்தம் , ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே;-

இந்த நன்றியை மறந்து போனாயோ ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ ?
சந்த தமுன திதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடை யதல்லவோ ?-

பழைய பாவத்தாசை வருகுதோ ?பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக் கடல் தள்ளுவானேன் ? -

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகை விட்டுப்
பிரியினும் அவர்கே மரிப்பாயே ,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் .-