Showing posts with label சா.ஈ.கிறிஸ்மஸ். Show all posts
Showing posts with label சா.ஈ.கிறிஸ்மஸ். Show all posts

Friday, April 16, 2010

உச்சித மோட்ச பட்டணம் போக கீர்த்தனை 235

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே ;- அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு , ஓயா இன்பமுண்டு ,

சரணங்கள்

சித்தச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் -எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். - உச்சித

அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்;- அங்கே
இன்பங்க்ல்களுண்டு; இயேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே - உச்சித

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்; -அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறிவோம்- உச்சித