Showing posts with label சு. முத்துசாமி. Show all posts
Showing posts with label சு. முத்துசாமி. Show all posts

Monday, August 31, 2009

வேளை இது சபையே கீர்த்தனை 125

பல்லவி

வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை