Showing posts with label பாக்கியநாதன் தாவீது. Show all posts
Showing posts with label பாக்கியநாதன் தாவீது. Show all posts

Wednesday, July 29, 2009

ஏசு கிறிஸ்து நாதர் கீர்த்தனை 93

பல்லவி



ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .



சரணங்கள்



மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு



அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு



வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு



தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு

பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்