Showing posts with label வே. சாஸ்திரியார்.. Show all posts
Showing posts with label வே. சாஸ்திரியார்.. Show all posts

Tuesday, April 20, 2010

சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா கீர்த்தனை 49

பல்லவி
சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா ,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பன்னினான் .- சர\

கற்றூணில் சேர்த்திருகக்கட்டி, வலுவாய்க்
காவலன் தன சேர்வை எல்லாம் கூடி அளித்தார்- சர

முள்ளின் முடி செய்தழுத்தி வள்ளல் எனவே
மூர்க்க முடனே தடிகொன் டார்க்க அடித்தார் - சர

கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் -சர

துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் ,
துன்னிய கைக்கோளை வாங்கி சென்னியில் போட்டார் .சர

முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே ,
முன்ன்வனைப் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் -சர