Showing posts with label ஆ.ஜா. பிட்சைமுத்து. Show all posts
Showing posts with label ஆ.ஜா. பிட்சைமுத்து. Show all posts

Wednesday, May 27, 2009

ராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272

பல்லவி

ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்

ராஜ்யம் புவிஎணககும் மகா மாட்சியாய் விளங்க

அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயாவே!

அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

சரணங்கள்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,

மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் !

நாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,

மேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் !

நல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்

புன்னகையொடு நிற்பானேன் ? பூமுடி சூட்டுங்கள் !

இந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,

சிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் !


யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,

ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்


சகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்

மகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்