பல்லவி
ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா
ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், இறந்
துயிர்த்தெழுந்தரே, உன்னதரே -
சரண்ங்கள்
வெற்றி கொண்டார்ப்பரித்து-கொடும் வே
தாளத்தை சங்கரித்து, முறித்து ;
பத்ராசனக் கிறிஸ்து -மரித்து
பாடுபட்டுத தரித்து , முடித்தார் .
சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,
ஜீவனே விடிந்து ,- தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-
வேடம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,
மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித் தார்
Monday, April 6, 2009
எங்கே சுமந்து போகிறீர்
பலலவி
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்
சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானவில் உம்து
அங்கம் முழுதும் நோக , ஐயா, என் ஏசு நாதா .-
பாரம் அழுத்த் தூக்க பெலம் இல்லம்மால் ,
நாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்
வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாத சீமோனும் பின்னாக தாங்கி வர
தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர -
வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லா பாவங்கள் எல்லாம் நாசமா கவும் -
மாசணுகாத சத்திய் வாசகனே ,உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்
சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானவில் உம்து
அங்கம் முழுதும் நோக , ஐயா, என் ஏசு நாதா .-
பாரம் அழுத்த் தூக்க பெலம் இல்லம்மால் ,
நாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்
வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாத சீமோனும் பின்னாக தாங்கி வர
தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர -
வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லா பாவங்கள் எல்லாம் நாசமா கவும் -
மாசணுகாத சத்திய் வாசகனே ,உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
தோத்திரம் செய்வேனே
தோத்திரம் செய்வனே ரட்சகரை
தோத்திரம் செய்வேனே
அனுபல்லவி
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்
சரணங்கள்
அன்னை மறி சுதனை புல் மீது
அமிழ்து கழுதவனை,
முனனணை மீதுற்ற சின்ன குமாரனை ,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
கந்தை போதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சிய யளித்தோனை
வான பரன் என்னும் ஞான குண வானை
செம்பொன் னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி
தோத்திரம் செய்வேனே
அனுபல்லவி
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்
சரணங்கள்
அன்னை மறி சுதனை புல் மீது
அமிழ்து கழுதவனை,
முனனணை மீதுற்ற சின்ன குமாரனை ,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
கந்தை போதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சிய யளித்தோனை
வான பரன் என்னும் ஞான குண வானை
செம்பொன் னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி
தேவனே நான் உமதண்டையில்
தேவனே நான் உமதண்டையில் -இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில் .
அனுபல்லவி
மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .
சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-
பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-
நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-
ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
சேர்வதே என் ஆவல் பூமியில் .
அனுபல்லவி
மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .
சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-
பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-
நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-
ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
Saturday, April 4, 2009
எழுந்தார் இறைவன்
பல்லவி
எழுந்தார் இறைவன் ,-ஜெயமே
எழுந்தார் இறைவன்
சரணங்கள்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க ,- இப்
பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க -உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க .-
விழுந்தவரை கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற -
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற
கருதிய காரியம் வாய்க்க்த் -தேவ
சுருதி மொழிகளெ ல்லாம் காக்க -நம்
இரு திறத்தாரையும் சேர்க்க -
எழுந்தார் இறைவன் ,-ஜெயமே
எழுந்தார் இறைவன்
சரணங்கள்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க ,- இப்
பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க -உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க .-
விழுந்தவரை கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற -
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற
கருதிய காரியம் வாய்க்க்த் -தேவ
சுருதி மொழிகளெ ல்லாம் காக்க -நம்
இரு திறத்தாரையும் சேர்க்க -
Friday, April 3, 2009
பவனி செல்கிறார் ராசா
பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,-
சரணங்கள்
எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின் ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !-
பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.-
குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருந்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,-
சரணங்கள்
எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின் ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !-
பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.-
குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருந்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர்
அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.-
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்.-
ஆதி நரர் செய்த தீதறவே ,
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் .-
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே .-
மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர்
அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.-
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்.-
ஆதி நரர் செய்த தீதறவே ,
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் .-
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே .-
மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே
Subscribe to:
Posts (Atom)