மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே
மங்கள நித்திய மங்கள நீ , மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ , எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்கத்தனாம் ஆபிரகாம் தேவன் நீ- மங்களம்
மங்கள மணமகன்
மங்கள மணமகள்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே உனை
துத்தியம் செய்திடும் சத்திய வேடர்க்கும்-மங்களம்
Thursday, April 15, 2010
Wednesday, April 14, 2010
நல்லாவி ஊற்றும்
நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான்தர நித்தம் துதிபாட
நல்லவி ஊற்றும் தேவா
பெந்தே கொஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேலையில் இறங்கிடுவீரே
விந்தை செய் வின் ஆவியாய்
மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டென்னையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே
ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேடப் பணியாற்றவும்
பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க
நற்கனி நான்தர நித்தம் துதிபாட
நல்லவி ஊற்றும் தேவா
பெந்தே கொஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேலையில் இறங்கிடுவீரே
விந்தை செய் வின் ஆவியாய்
மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டென்னையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே
ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேடப் பணியாற்றவும்
பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .
நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .
நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .
எந்தன் நாவில் புது பாட்டு
எந்தன் நாவில் புது பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்- அல்லேலுயா
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்
வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீடிட்டார் - ஆனந்தம்
சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்
இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்- அல்லேலுயா
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்
வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீடிட்டார் - ஆனந்தம்
சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்
இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்
என்னை மறவா இயேசு நாதா
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை
2 .பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவருமென்னை - என்னை
3 .தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை
4 .உன்னை தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை
5. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வைத்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை
2 .பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவருமென்னை - என்னை
3 .தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை
4 .உன்னை தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை
5. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வைத்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம் .
1 . ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளி தன்னைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும். - கர்த்தரை
2 . உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தை காத்திடுவார் .- கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை
4 . அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்.- கர்த்தரை
5 .நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே - கர்த்தரை
6 .இம்மைக் கேற்ற இன்பங்களை
நம்மைவிட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம் .
1 . ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளி தன்னைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும். - கர்த்தரை
2 . உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தை காத்திடுவார் .- கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை
4 . அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்.- கர்த்தரை
5 .நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே - கர்த்தரை
6 .இம்மைக் கேற்ற இன்பங்களை
நம்மைவிட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்
Tuesday, November 17, 2009
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
1. அல்லேலுயா துதி மகிமை - என்றும்
அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா! எங்கள் ராஜா !
என்றென்றும் போற்றிடுவோம் .- ஓசன்னா
2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை! கலக்கம் இல்லை !
கர்த்தர் நம்முடனே -ஓசன்னா
3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமும் இலை! கலக்கம் இல்லை!
மீட்பர் நம்முடனே - ஓசன்னா
4. பாதாளம் வாய் திறந்தாலும்
மரணமே எதிர் வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை !
இயேசு நம்முடனே - ஓசன்னா
எழுதியவர்
சாம் ஜெபத்துரை
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
1. அல்லேலுயா துதி மகிமை - என்றும்
அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா! எங்கள் ராஜா !
என்றென்றும் போற்றிடுவோம் .- ஓசன்னா
2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை! கலக்கம் இல்லை !
கர்த்தர் நம்முடனே -ஓசன்னா
3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமும் இலை! கலக்கம் இல்லை!
மீட்பர் நம்முடனே - ஓசன்னா
4. பாதாளம் வாய் திறந்தாலும்
மரணமே எதிர் வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை !
இயேசு நம்முடனே - ஓசன்னா
எழுதியவர்
சாம் ஜெபத்துரை
Subscribe to:
Posts (Atom)