சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே
ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .
எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.
தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .
Friday, November 6, 2009
Friday, October 30, 2009
கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35
பல்லவி
கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று
அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்
சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்
தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்
முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்
அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்
அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்
கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று
அனுபல்லவி
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்
சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்
தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்
முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்
அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்
அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்
எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்
வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்
அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்
எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்
வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்
அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்
ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்
ஆதி பிதா குமாரன் -கீர்த்தனை 10
பல்லவி
ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.
அனுபல்லவி
நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி
சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி
நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.
அனுபல்லவி
நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி
சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி
நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319
பல்லவி
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
ச்ரணங்கள்
எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்
நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்
சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்
இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
ச்ரணங்கள்
எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்
நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்
சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்
இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்
Wednesday, September 2, 2009
இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183
பல்லவி
இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மாற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .
சரணங்கள்
இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்.-நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு
இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு
பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;
இருதயத்தின் நிலை அசைய -அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே.-இயேசு
சோதியாய் அவர் வரும் போது-நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;
நீதியாம் ஆடை தரிப்பேன் ,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் - இயேசு
நெஞ்சமே ,தள்ளாடி நொந்து கீர்த்தனை 204
பல்லவி
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .
சரணங்கள்
தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச
அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச
ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச
பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச
கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச
ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .
சரணங்கள்
தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச
அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச
ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச
பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச
கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச
ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச
Subscribe to:
Posts (Atom)