Thursday, June 18, 2009

அடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168

பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன்
அடைக்கலம் அடைக்கலமே !

அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை

சரணங்கள்
ஆசையோடு பாவமத்தில் அலைந்து திரிந்தேனே ,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே ;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்ந்தருள் !-அடை

கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன் ;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே ,
கிட்டி வந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!- அடை

சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும் ;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!-அடை

என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தாயல்லவோ

Monday, June 15, 2009

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா? கீர்த்தனை 72

பல்லவி

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

பரகதி திறந்து பாரினில் பிறந்து ,

நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,

சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,

ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

Thursday, June 11, 2009

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !

பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !

மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே

Saturday, June 6, 2009

பாவியாகவே வாறேன் கீர்த்தனை 155

பல்லவி
பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன் .

சரணங்கள்
பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் -பாவி

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே ;
தேவா , உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் -பாவி

பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் -பாவி

ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன் ,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் -பாவி

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் ;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் -பாவி

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான் -பாவி

சுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி
சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந்

சரணங்கள்

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே ,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் ;-பவத் துயர்
போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே ,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட ,-வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் -சுந்

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங் கிருபை தங்கி வாழவே ,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே ,
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும் ,
உயர்ந்து -வாழ, தீயோன்
பயந்து -தாழ, மிக
நயந்து க்ரிஸ்துவுக்கு ஜெயந்தான் , நயந்தான் என்றும்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனை 77

பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்

மானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்

துதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் .
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் .- துதி

மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்.
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் .- துதி

திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் .-

அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் ,
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் .-துதி

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்.
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் .-துதி

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் .
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் -துதி