Friday, April 3, 2009

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.

நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர்
அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.-

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்.-

ஆதி நரர் செய்த தீதறவே ,
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் .-

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே .-

மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே




எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே,- எனக்கெல்லாம்
தொல்லைமிகு மிவ்வுலகில் -துணை யேசுவே


ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்;


தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் ,-


கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்,
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்


அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்-


ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .-

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுர மாமே ;-
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே .

காசினிதனிலேநேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;- பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத தொலைத்தார்; கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;- பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே .

காலையில் பனி போல் மயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் ;
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் ; -நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துணைக் காப்பார்; ஆசைகொள் நீ மனமே ;-

பூலோகத்தாரும் மேலோகத்தரும் புகழ்ந்து போற்று நாமம் ;அதைப்
பூண்டு கொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் ,- சகோதர
அன்பே பிரதானம் .

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்பவிஸ்வாசம் இவைகளிலெல்லாம்-

பலபல பாஷை படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் கைமணியாமே.-

என் பொருள் யாவும் ஈந்தளி த்தாலும்
ன்பிலையானால் அதில் பயனில்லை .-

துணிவுடன் உடலை சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் அதிற் பயனில்லை.-

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொ றுமையுமுள்ள.-

புகழிறுமாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா .-

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது,- தீமை செய்யாது .-

சக்லமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகை பட வென்னும் மேன்மை பெற்றோங்கும் -


Thursday, April 2, 2009

குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வாடிய
கொல்கதா மலை தனிலே
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ!-தீயர்
திருக்கரங்களில் ஆணிகளடித்தார்,
சேனை திரள் சூழ .-

பாதகர் நடுவில் பாவியிநேசன்
பாதகன் போல்தொங்க ,- யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
ப்டுத்திய கொடுமை தனை


சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையா-தேவ சுந்தர
மைந்தனுயிர் விடு காட்சியால்
துடிக்கா நெஞ் சுண்டோ?



ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன்விலாவதிலே,- அவர்
அதகன் தீட்சை குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது, பார் -

எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ - தொன்
கொடுமின் இள மண வாளன்
எடுத்த கோலமிதோ?-











Wednesday, April 1, 2009

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசர்

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே ,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா

முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம்

சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் .

பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

விந்தை கிறிஸ்தேசு ராசா

விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை.

சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் -

திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே -


உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் -

சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-

இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-