Wednesday, June 24, 2009

ஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153

பல்லவி

யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட

இழிஞன் எனை மீட்டருள் ,

ஏசுவே,கிரு பாசனப்பதியே

சரணங்கள்

காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு

கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !

நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு

பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட

தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,

புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு

2 comments: