Saturday, May 30, 2009

எங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188

பல்லவி

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .

சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே

வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே

எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே

உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே - எங்கே

தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே

ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்

Thursday, May 28, 2009

உன்றன் சுய மதியே கீர்த்தனை 121

பல்லவி
உன்றன் சுயமதியே நெறி என் று
உகந்து சாயாதே ;-அதில் நீ
மகிழிந்து மாயாதே .

சரணங்கள்
மைந்தனே ,தேவ மறைப்படி,யானும்
வழுத்தும் மதி தனைக் கேளாய் ;-தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய் .-உன்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ ,
வந்து விளையுமே கேடு ;-அதின்
தந்திர போக்கை விட்டோடு ;கதி தேடு ;-உன்


துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே ;-தீயர்
கெட்ட வழியில் நில்லாதே ;-அது தீதே ;-உன்

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே ;-அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே,-உன்


நான் என்ற எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் ; -அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் ;மனஸ்தாபம்; -உன்

Wednesday, May 27, 2009

ராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272

பல்லவி

ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்

ராஜ்யம் புவிஎணககும் மகா மாட்சியாய் விளங்க

அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயாவே!

அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

சரணங்கள்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,

மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் !

நாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,

மேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் !

நல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்

புன்னகையொடு நிற்பானேன் ? பூமுடி சூட்டுங்கள் !

இந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,

சிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் !


யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,

ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்


சகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்

மகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்

மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267

பல்லவி

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69

பல்லவி

என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் !

இயம்பலாகாதே ,

மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே .

சரணங்கள்

கூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம் ;

நாடியே நம்மை தேடியே வந்த

நாதனைப் போற்றிடுவோம் .

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்

பரிகரித்தாரே;

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே .

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

அருளினதாலே ;

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகர வேண்டியதே .

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்

ஜெயக் கொடியுடனே,

மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற

மன்னனைத் தோத்தரிபோம்.

Thursday, May 21, 2009

இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142

இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர

அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர

தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர

Wednesday, May 20, 2009

கிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே

கிருபை புரிந்தெனை ஆள்

சரணங்கள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,

வரில் நரனாகிய மா துவின் வித்து !- கிரு


பண்ணின பாவமெலாம் அகல்வித்து ,

நின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு


தந்திர வான் கடியின் சிறை மீட்டு

எந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு


தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி ! என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ


தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து

நல்வினையே செய் திராணி அளித்து .-கிரு


அம்பரமீ துறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த



மன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

தெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8

தெய்வன்பின் வெள்ளமே ,திருவருள் தோற்றமே ,
மெய்ம் மன தானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா , நின் அடி பணிந்தேன் .


மூர்க்ககுனம் கோபம் மோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கிடத் தடுமாறி தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்.


சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோயான் ?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன் .



பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி
தேவே தவறிடினும்
கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா !

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன் .

மரணமோ ஜீவனோ ,மறுமையோ ,பூமியோ ,
மகிமையோ ,வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ ,உயர்ந்ததோ ,தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை ?



வரவேணும் என தரசே கீர்த்தனை 64

பல்லவி

வர வேணும் ,என தரசே ,

மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி

அருணோ தயம் ஒளிர பிரகாசா ,

அசரீரி ஒரே சரு வேசா !- வர

வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,

ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,

தாதாவும் தாய் சகலமும் நீயே :

நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர

படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,

முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,

இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,

இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர

வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,

கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,

ஞானகரமே, நடு நிலை யோவா ,

நண்பா , உனத நன்மையின் மகா தேவா !

Monday, May 18, 2009

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் -உமை மா அரசே
தோத்ரம் உம மாட்சிமைக்கே -பரனே
துந்துமி மாட்சிமைக்கே -பிதாவே .

சுதனே யிரங்கும்-புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த - தூய செம்மறியே,
சுத்தா ஜெபங் கேளும் -பரன்வலத்
தோழா ஜெபங் கேளும் -கிறிஸ்தே .

நித்ய பிதாவின் -மகிமையில் நீரே
நிமலாவியினோ - டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே -உன்னத
நேயருக் கர்ச்சனையே - ஆமென்

கதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன் .

கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே -என் இஷ்டம் .

ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் -போற்றுவேன் .

ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் -உயர்த்துவேன் .

மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை -சிந்திப்பேன் .

அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே -ஒதுங்குவேன் .

ஆத்துமம் தேவனைத் அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் .

சருவலோகதிபா நமஸ்காரம் கீர்த்தனை 5

சருவ லோகதிபா நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் !
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் .

திரு அவதாரா, நமஸ்காரம் !
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் !
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் !

பரிசுத்த ஆவி நமஸ்காரம் !
பரம சற்குருவே நமஸ்காரம் !
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் !


முத்தொழிலோனே நமஸ்காரம் !
மூன்றில் நின்றோனே நமஸ்காரம் !
கர்த்தாதி கர்த்தா, கருணை சொரூபா,நித்ய திரியேகா, நமஸ்காரம் .

Tuesday, May 5, 2009

ஏசுவைப் போல நட கீர்த்தனை 220

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -



சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-



சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --


எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்

வாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203

பல்லவி

வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா

தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா

நித்தம் முயல் மனமே கீர்த்தனை 219

பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்


அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்