Wednesday, July 29, 2009

ஏசு கிறிஸ்து நாதர் கீர்த்தனை 93

பல்லவி



ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .



சரணங்கள்



மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு



அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு



வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு



தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு

பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்

Monday, July 27, 2009

அருமை ரட்சகா கூடி வந்தோம் கீர்த்தனை 259

பல்லவி

அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .

அனுபல்லவி

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு

சரணங்கள்

ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் - அரு

ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு

உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு

கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு

எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு

பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு
.

ஆண்டவர் பங்காக அனைத்தையும் கீர்த்தனை 230

பல்லவி

ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,

அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்

இன்பந்தனைப் பாரும் .

அனுபல்லவி

வான்பல கனிகளைத் திறந்தாசீர்

வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்

நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று

ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்

சரணங்கள்

வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்

விண்ணவர் கோமானே -அந்த

மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட

விதித்தது தானே .

வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,

வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,

ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்

உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்

ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய

அருட்பணி பேண, -தேவ

ஊழியரைத் தாங்கி உன்னத போதனை

ஓதும் நன்மை காண ,

ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்

எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,

சாலவறிவு நாகரீக மற்றவர்

தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்

நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்

யாவும் நமக்கீந்து ,-நல்ல

இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து

இவ்வாறன்பு கூர்ந்து ,

நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண

நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்

சம்மதமே அதிலும் தசம பாகம்

தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்

வா பாவி மலைத்து நில்லாதே கீர்த்தனை 124

பாலவி
வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

சரணங்கள்
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன் - வா

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .- வா

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ? - வா

பல்லவி

அருமருந்தொரு சற்குரு மருந்து ,

அகிலமீடேற இதோ திவ்யமருந்து .

சரணங்கள்

திருவளர்தெய்வம் சமைத்த மருந்து ,

தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து .

இருதய சுத்தியை ஈயுமருந்து ,

இகபரசாதனம் ஆகும் மருந்து .

ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து ,

அவனியோர் அழியா கற்பக மருந்து .

சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ,

ஜீவன் முத்தி தருஞ்சேணுள்ள மருந்து .

பணமில்லை இலவசமான மருந்து,

பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து .

என்றும் அழியாத தேவருள் மருந்து ,

என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து .

Sunday, July 26, 2009

ராச ராச பிதா மைந்த கீர்த்தனை 91

பல்லவி

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த

யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே !

அனுபல்லவி

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக -

சரணங்கள்

மாசிலாமணியே ! மந்தர ஆசிலா அணியே ! சுந்த்ர

நேசமே பணியே , தந்திர மோசமே தணியே;

நிறைவான காந்தனே ! இறையான சாந்தனே ! மறை - ராச

ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே ,முந்த

வேதா பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே ;

பத ஆமனாமானா ! சுதனாமனாமனா! சித- ராச

மேன்மையா சனனே ,நன்மை மேவுபோசனனே ,தொன்மை

பான்மை வாசனனே ,புன்மை பாவ மோசனனே ,

கிருபா கரா நரா! சருவேசுரா ! பரா ,திரு - ராச

வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே ,மைந்தர்

கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,

நரவேட மேவினான் ;சுரராடு கோவினான், பர -ராச

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கீர்த்தனை 90

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் ;-எங்கள்

குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன் .

சரணங்கள்

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் ;-எனை

ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் ;

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் ;-பவ

நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் ;

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய

சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் ;

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்

தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் .-கும்

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ;-ஒன்றும்

ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் ;

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது

சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் ;யூதர்

குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் ;

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் ;-என

தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்

Monday, July 20, 2009

ஆத்தும ஆதாயம் செய்குவோமே கீர்த்தனை 226

பல்லவி

ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது
ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம் .

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்
தஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செயவோமாகில்
அற்புதமான பலனை அடையலாம் .-

சரணங்கள்

பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் ,- ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்திவிட்டால் ,
ஆளுந்துரையவ னாயிருந்தாலூமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும

கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவ சுதன் -வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தை தானே ;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே

Tuesday, July 7, 2009

ஜெப சிந்தை என்னில் தாரும் கீர்த்தனை 206

பல்லவி
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -

சரணங்கள்

உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப

இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப

ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப