Monday, March 30, 2009

சத்தாய் நிஷகளமாய் கீர்த்தனை 1

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்,
சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ்ன் என் ப்வந் தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே?

எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மா றுண்டு கொலோ? கடை காருங் கையடையாய்
சும்மாரட்சணை செய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
அம்மான் உன்னை யல்லால் எனக்கார் துணை, யாருறவே ?

திரைசேர் வெம்பவமாம் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேன் என்னைப் பற்றிய பற்று விடாய்,
அரசே, உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?

தாயே தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்
'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை?
ஆயே ,உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?

துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக் கொள்ள ,
இப்பா ருய்யவென்றே மனுக் கோல மெடுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?

No comments:

Post a Comment