Wednesday, June 15, 2011

உனக்கு நிகரானவர் யார் ? கீர்த்தனை 81

பல்லவி


உனக்கு நிகரானவர் யார் ? - இந்த


உலக முழுவதிலுமே .


அனுபல்லவி


தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே


மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு





சரணங்கள்


1.தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த


தமையன் தம்பிக்காய் மாய்வானோ?


நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை


நேர் விரோதிக்காய் ஈவானோ?


நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து


காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .





2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை


கனக்க உடுத்துவித்தனை,


மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்


மாற்றி எந்தனைக் காத்தனை;


கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,


சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு





Wednesday, June 8, 2011

இயேசு கலந்துகொண்ட கலியாணம்

கலியாணமாம் கலியாணம்
கானாவூரு கலியாணம்
கர்த்தன் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
கலியாணமாம் கலியாணம் ஆ-ஆ-ஆ-

1.விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே...
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்

2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய் ....
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்

3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்

சமயமிது நல்லசமயம் ,உமதாவி கீர்த்தனை 97

பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, - சம


ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், - சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

உந்தன் ஆவியே , சுவாமி , என்றான் மீதினில் கீர்த்தனை 95

பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்

புண்ணியன் இவர் யாரோ கீர்த்தனை 45

பல்லவி
புண்ணியர் இவர் யாரோ ? - வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் - புண்

சரணங்கள்
1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்

ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-

நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்
3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்