Wednesday, June 8, 2011

உந்தன் ஆவியே , சுவாமி , என்றான் மீதினில் கீர்த்தனை 95

பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்
1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . - உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , - உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்

No comments:

Post a Comment