Wednesday, April 1, 2015

சிலுவை சுமந்த என் இயேசு

சிலுவை சுமந்த என் இயேசு
சிந்தின இரத்தம் புரண்டோடியே
 நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை காணாய்
நிலையான சந்தோஷம் பூவினில்
 கர்த்தாவின் அன்பண்டையில் வா

ஆத்தும  மீட்பை பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

தாகமடைந்தோர்  எல்லாருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

கிறிஸ்தவ